தமிழ் சசி அவர்களின் தேர்தல் 2006 ஆச்சரியங்கள்
என்ற பதிவிற்கு எழுதிய மறுமொழி:
விஜயகாந்த்தின் வெற்றிக்கு நீங்கள் சொல்லும் காரணங்களை விட சில முக்கியமாண காரணங்கள் இருக்கின்றன.
அந்த தொகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் நான் அறிந்தவை இவை. மற்றபடி எனக்கு அரசியலில் அ ஆ கூட தெரியாது!
1. முதல் முக்கிய காரணம்: பமக வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற முறை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிடக்கூட செல்லவில்லை. அந்த பகுதிகள் இவர் வசிக்குமிடத்திலிருந்து சொற்ப கி. மீ. தூரத்திலிருந்தும் இந்த நிலை!
2. கட்சியின் தலைவர் என்பதால், வாய்ப்பளித்தால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கண்டிப்பாக உருப்படியாய் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை.(ஒரு புதிய மூன்றாம் அணி என்றெல்லாம் யோசிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கக்கூடும். மூன்றாவது அணி என்று மதிக்கிற அளவிற்கு அங்கு ஒன்றுமில்லை.)
3. விஜயகாந்த் வெற்றிபெற்றால், விருத்தாசலம் ஒரு VIP தொகுதி ஆகிவிடும் என்கிற ஆவல்.
4. அதிக பரிச்சயமில்லாத அதிமுக வேட்பாளர்.
நம் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என்னைப் பாதிக்கையில், நான் சொல்ல நினைப்பவை இவை...
Thursday, May 11, 2006
Wednesday, May 03, 2006
திரை இயக்கம்
'திரை' என்றொரு மாத இதழ். 'உலக சினிமாவின் முகம்' என்கிற அடைமொழியோடு வந்துகொண்டிருக்கிறது. படிக்கும்போது அது உண்மைதான் என உணர முடிகிறது. இதுவறை வந்திருக்கிற சினிமா இதழ்கள் அனைத்தும், சினிமா இதழ்கள் மீது, நம்மில் உருவாக்கி வைத்திருக்கிற கற்பிதங்களை உடைக்கிறது இந்த இதழ். சினிமாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு கிடைத்தற்கறிய விஷயம் இது.
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய மற்றும் உலக சினிமா அனைத்தயும் அலசுகிறார்கள். தலைசிறந்த கலைஞர்களின் கட்டுரைகள், பேட்டிகள், தமிழ் சினிமாக்கள் மீதான உண்மையான சினிமா விமர்சனம் என கலக்குகிறார்கள். சமீபத்தில் கதை, திரைக்கதை அமைப்பது பற்றி ஒரு நல்ல தொடர் கட்டுரை வந்துகொண்டிருக்கிறது.
ஆசிரியர்: லீனாமணிமேகலை.
இதழின் விலை: Rs. 20.
இது விளம்பரம் அல்ல! மேற்காணூம் தகவல்கள், திரை இதழ் பற்றி அறியாதவர்களுக்காக. இந்த இடுக்கையின் நோக்கம்:
இவர்கள் 'திரை இயக்கம்' என்றொரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
"உலக சினிமாக்களையும், நல்ல குறும்படங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அவற்றை காண இயலாத திரைப்பட ஆர்வலர்களுக்கு, அவற்றை காணக் களம் அமைக்கும் இயக்கமே திரை இயக்கம்" - என்கிறார்கள்.

இதில் உறுப்பினர் ஆவதற்கு 20 பேர் ஒரு குழுவாக சேர்ந்து ஒவ்வொருவரும் 'திரை' இதழ் சந்தாதாரர் ஆகவேண்டும். (ஆண்டு சந்தா 200/=). நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இயக்கத்தில் சேர ஆர்வமுற்றிருக்கிறோம். ஆனாலும் 20 பேர் வேண்டுமே! சென்னையில் இருக்கும் உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் எங்களுடன் சேர்ந்துகொள்ள அழைக்கிறோம். எங்களைப்போலவே இதில் ஆர்வமிருந்தும் 20 பேர் வேண்டுமே என காத்திருக்கும் குழுக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
நட்புடன்,
அருள்.
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய மற்றும் உலக சினிமா அனைத்தயும் அலசுகிறார்கள். தலைசிறந்த கலைஞர்களின் கட்டுரைகள், பேட்டிகள், தமிழ் சினிமாக்கள் மீதான உண்மையான சினிமா விமர்சனம் என கலக்குகிறார்கள். சமீபத்தில் கதை, திரைக்கதை அமைப்பது பற்றி ஒரு நல்ல தொடர் கட்டுரை வந்துகொண்டிருக்கிறது.
ஆசிரியர்: லீனாமணிமேகலை.
இதழின் விலை: Rs. 20.
இது விளம்பரம் அல்ல! மேற்காணூம் தகவல்கள், திரை இதழ் பற்றி அறியாதவர்களுக்காக. இந்த இடுக்கையின் நோக்கம்:
இவர்கள் 'திரை இயக்கம்' என்றொரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
"உலக சினிமாக்களையும், நல்ல குறும்படங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அவற்றை காண இயலாத திரைப்பட ஆர்வலர்களுக்கு, அவற்றை காணக் களம் அமைக்கும் இயக்கமே திரை இயக்கம்" - என்கிறார்கள்.

இதில் உறுப்பினர் ஆவதற்கு 20 பேர் ஒரு குழுவாக சேர்ந்து ஒவ்வொருவரும் 'திரை' இதழ் சந்தாதாரர் ஆகவேண்டும். (ஆண்டு சந்தா 200/=). நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இயக்கத்தில் சேர ஆர்வமுற்றிருக்கிறோம். ஆனாலும் 20 பேர் வேண்டுமே! சென்னையில் இருக்கும் உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் எங்களுடன் சேர்ந்துகொள்ள அழைக்கிறோம். எங்களைப்போலவே இதில் ஆர்வமிருந்தும் 20 பேர் வேண்டுமே என காத்திருக்கும் குழுக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
நட்புடன்,
அருள்.
Thursday, April 27, 2006
கற்பு?!
சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த கவிதை இது...
"ஸ்கூட்டர்களுக்காகவும்
பிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும் போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது"
- கவிஞர் ரோகிணி
படித்த நொடியில் ஏதேதோ பாதிப்புகளை ஏற்படுத்திய இக்கவிதை - தங்கர்பச்சான், குஷ்பு என அனைத்து கற்பு சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கான பதில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது! கற்பின் பயன்பாடு எவ்வளவு சுயநலமானது என்பதை இதவிட எளிமையாகவும், வலிமையாகவும் சொல்லமுடியும் எனத்தோன்றவில்லை. முகத்திலறையும் நிஜமும், மெல்லிதாய் இழையோடும் சோகமும் இக்கவிதையின் வெற்றி.
கவிஞர் ரோகிணி யாரெனத்தெரியவில்லை. அவரைப்பற்றியும், அவரின் பிற படைப்புகள் பற்றியும் காணக்கிடைத்தால் மகிழ்ச்சி. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
"ஸ்கூட்டர்களுக்காகவும்
பிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும் போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது"
- கவிஞர் ரோகிணி
படித்த நொடியில் ஏதேதோ பாதிப்புகளை ஏற்படுத்திய இக்கவிதை - தங்கர்பச்சான், குஷ்பு என அனைத்து கற்பு சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கான பதில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது! கற்பின் பயன்பாடு எவ்வளவு சுயநலமானது என்பதை இதவிட எளிமையாகவும், வலிமையாகவும் சொல்லமுடியும் எனத்தோன்றவில்லை. முகத்திலறையும் நிஜமும், மெல்லிதாய் இழையோடும் சோகமும் இக்கவிதையின் வெற்றி.
கவிஞர் ரோகிணி யாரெனத்தெரியவில்லை. அவரைப்பற்றியும், அவரின் பிற படைப்புகள் பற்றியும் காணக்கிடைத்தால் மகிழ்ச்சி. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
Wednesday, March 29, 2006
ரகசிய சிக்னல்
தமிழ்நாட்டு மக்களின்(என்னையும் சேர்த்துதான்!) அனுசரித்துப்போகும் மனோபாவம் மிக அலாதியானது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் கீழே இருக்கும் படம்.

(cell phone-ல் எடுத்த படம். எடுத்தபோது சூரியஒளி வேறு எதிர்ப்பக்கமிருந்து...! சரியாய் தெரியலன்னாலும் கொஞ்சம் adjust பண்ணி பாத்துப்பீங்கன்னு நம்பறேன்:) )
சென்னை 100 அடி சாலையில் MMDA நிறுத்தத்திலிருந்து வடபழனி செல்லும் வழியில், MMDA சிக்னலுக்கு அடுத்து வரும் சிக்னல் இது. பல மாதங்களாகவே இந்த சிக்னல், ஒரு மின்விளக்கு கம்பத்தின் பின் ஒளிந்துகொண்டு, நம்ம கிராமத்து காதலிகள் காதலன்களுக்கு கொடுக்கும் ரகசிய சிக்னல் போலத்தான் சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கிறது!
சில கோணங்களில் 'நில், கவனி, செல்' இந்த மூன்றும் சுத்தமாக தெரிவதில்லை. seconds coundown-ல் கூட ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள்தான் தெரியும். 110 வினாடிகள் இருக்கையில் 10 வினடிகள் தான் இருப்பதாய் அடித்து பிடித்துக்கொண்டு, முழு திறமையையும் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களை பார்க்கையில் வேடிக்கையாய் இருக்கும். நிரைய விபரீதங்கள் நிகழ வாய்ப்பிருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாய் தெரியவில்லை. (தினசரி இரண்டு முறை அந்த சிக்னலை கடக்கும் என்னையும் சேர்த்துதான்!)
இதை யாரிடம் கேட்ப்பது? கேட்டால் நமக்கு என்ன பிரச்சனைகள் வரும்? அப்படியே கேட்டாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுமா? இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நமது நேரத்தை வீணாக்குவதை விட இதை adjust பண்ணி போவது மிக எளிதாகத்தானே இருக்கிறது! இவ்வளவையும் தினசரி பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து காவல்துறை காவலருக்கு இல்லாத கடமை நமக்கென்ன வந்தது? - இந்த எண்ணம் தான் நம்ம specialty! இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக பார்க்காமல்,
"மச்சி... அந்த சிக்னல பாரேன். நைசா ஒளிஞ்சிகிட்டு ரகசிய சிக்னல் கொடுக்குது..!" என்று ரசித்து சிரிக்கிற கலைரசனை உடையவர்கள் நாம்!
பல வருடங்களுக்கு பிறகு, சென்ற கோடையில், கனடாவிலிருந்து நம்ம ஊருக்கு வந்திருந்தார் என் நண்பனின் மாமா. அவர் கேட்ட சில கேள்விகளும், சொன்ன சில விஷயங்களும்:
"நம்ம ஊர்லதாம்ப்பா இப்படி எல்லா விஷயத்தையும் adjust பண்ணி போறோம். அத்தியாவசியமான தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து இதெல்லாமே தினசரி போராட்டமா இருந்தா எப்படிப்பா முன்னேற முடியும்? ரொம்ம்ம்ம்ப கஷ்டம்! கனடாவுலல்லாம் maintenence-க்காக power-cut பண்ணாகூட மூனு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க. இங்க என்னடான்னா ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை power-cut பண்றாங்க. அதும் எந்த அறிவிப்பும் இல்லாம! இதெல்லாம் தாம்ப்பா ஒரு நாட்டோட முன்னேற்றத்தை தடுக்கிற விஷயங்கள். நீயே யோசிச்சு பாரு... தண்ணிக்காக ராத்திரி ஒரு மணிக்கும், ரெண்டு மணிக்கும் தூங்காம தண்ணி லாரிக்கு காத்திருந்து, அதையும் சண்ட போட்டு போராடி வாங்கறவன் அடுத்த நாள் office போயி(பஸ் பிடிச்சி போறது ஒரு தனி போராட்டம்!) அவன் வேலைய சரியா செய்யமுடியுமா? அப்புறம் productivity எப்படி இருக்கும்?! காலைல எழுந்து பைப் திறந்தா தண்ணி நம்ம வீட்டுக்குள்ள வரணும். இது நமக்கு நம்ம அரசாங்கம் தரவேண்டிய அடிப்படை வசதி. தரவேண்டியது அவங்க கடமை. அதுக்குதான வரி கட்டறோம்!"
தினசரி வாழ்வின் அத்தியாவசியங்களை குடிமக்களுக்கு வழங்குவது ஒரு அரசின் கடமை என்பதையே மறந்துவிட்டு, அரசு விதிக்கும் வரிகளையும் செலுத்தி, எல்லா பிரச்சனைகளையும் தாங்களே சமாலிக்கும் நம் மக்கள் - நமது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தானே!
நாம் வாக்களித்து பதவியில் அமரச்செய்தவர்கள் நமக்கே செய்யும் அக்கிரமங்களையே கண்டுகொள்ளாமல் adjust பண்ணிக்கொள்கிற நமக்கு இந்த சிக்னல் பிரச்சனையெல்லாம் ஒரு விஷயமா என்றுதானே சிரிக்கிறீர்கள்.
அதுவும் சரிதான் :(

(cell phone-ல் எடுத்த படம். எடுத்தபோது சூரியஒளி வேறு எதிர்ப்பக்கமிருந்து...! சரியாய் தெரியலன்னாலும் கொஞ்சம் adjust பண்ணி பாத்துப்பீங்கன்னு நம்பறேன்:) )
சென்னை 100 அடி சாலையில் MMDA நிறுத்தத்திலிருந்து வடபழனி செல்லும் வழியில், MMDA சிக்னலுக்கு அடுத்து வரும் சிக்னல் இது. பல மாதங்களாகவே இந்த சிக்னல், ஒரு மின்விளக்கு கம்பத்தின் பின் ஒளிந்துகொண்டு, நம்ம கிராமத்து காதலிகள் காதலன்களுக்கு கொடுக்கும் ரகசிய சிக்னல் போலத்தான் சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கிறது!
சில கோணங்களில் 'நில், கவனி, செல்' இந்த மூன்றும் சுத்தமாக தெரிவதில்லை. seconds coundown-ல் கூட ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள்தான் தெரியும். 110 வினாடிகள் இருக்கையில் 10 வினடிகள் தான் இருப்பதாய் அடித்து பிடித்துக்கொண்டு, முழு திறமையையும் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களை பார்க்கையில் வேடிக்கையாய் இருக்கும். நிரைய விபரீதங்கள் நிகழ வாய்ப்பிருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாய் தெரியவில்லை. (தினசரி இரண்டு முறை அந்த சிக்னலை கடக்கும் என்னையும் சேர்த்துதான்!)
இதை யாரிடம் கேட்ப்பது? கேட்டால் நமக்கு என்ன பிரச்சனைகள் வரும்? அப்படியே கேட்டாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுமா? இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நமது நேரத்தை வீணாக்குவதை விட இதை adjust பண்ணி போவது மிக எளிதாகத்தானே இருக்கிறது! இவ்வளவையும் தினசரி பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து காவல்துறை காவலருக்கு இல்லாத கடமை நமக்கென்ன வந்தது? - இந்த எண்ணம் தான் நம்ம specialty! இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக பார்க்காமல்,
"மச்சி... அந்த சிக்னல பாரேன். நைசா ஒளிஞ்சிகிட்டு ரகசிய சிக்னல் கொடுக்குது..!" என்று ரசித்து சிரிக்கிற கலைரசனை உடையவர்கள் நாம்!
பல வருடங்களுக்கு பிறகு, சென்ற கோடையில், கனடாவிலிருந்து நம்ம ஊருக்கு வந்திருந்தார் என் நண்பனின் மாமா. அவர் கேட்ட சில கேள்விகளும், சொன்ன சில விஷயங்களும்:
"நம்ம ஊர்லதாம்ப்பா இப்படி எல்லா விஷயத்தையும் adjust பண்ணி போறோம். அத்தியாவசியமான தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து இதெல்லாமே தினசரி போராட்டமா இருந்தா எப்படிப்பா முன்னேற முடியும்? ரொம்ம்ம்ம்ப கஷ்டம்! கனடாவுலல்லாம் maintenence-க்காக power-cut பண்ணாகூட மூனு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க. இங்க என்னடான்னா ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை power-cut பண்றாங்க. அதும் எந்த அறிவிப்பும் இல்லாம! இதெல்லாம் தாம்ப்பா ஒரு நாட்டோட முன்னேற்றத்தை தடுக்கிற விஷயங்கள். நீயே யோசிச்சு பாரு... தண்ணிக்காக ராத்திரி ஒரு மணிக்கும், ரெண்டு மணிக்கும் தூங்காம தண்ணி லாரிக்கு காத்திருந்து, அதையும் சண்ட போட்டு போராடி வாங்கறவன் அடுத்த நாள் office போயி(பஸ் பிடிச்சி போறது ஒரு தனி போராட்டம்!) அவன் வேலைய சரியா செய்யமுடியுமா? அப்புறம் productivity எப்படி இருக்கும்?! காலைல எழுந்து பைப் திறந்தா தண்ணி நம்ம வீட்டுக்குள்ள வரணும். இது நமக்கு நம்ம அரசாங்கம் தரவேண்டிய அடிப்படை வசதி. தரவேண்டியது அவங்க கடமை. அதுக்குதான வரி கட்டறோம்!"
தினசரி வாழ்வின் அத்தியாவசியங்களை குடிமக்களுக்கு வழங்குவது ஒரு அரசின் கடமை என்பதையே மறந்துவிட்டு, அரசு விதிக்கும் வரிகளையும் செலுத்தி, எல்லா பிரச்சனைகளையும் தாங்களே சமாலிக்கும் நம் மக்கள் - நமது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தானே!
நாம் வாக்களித்து பதவியில் அமரச்செய்தவர்கள் நமக்கே செய்யும் அக்கிரமங்களையே கண்டுகொள்ளாமல் adjust பண்ணிக்கொள்கிற நமக்கு இந்த சிக்னல் பிரச்சனையெல்லாம் ஒரு விஷயமா என்றுதானே சிரிக்கிறீர்கள்.
அதுவும் சரிதான் :(
Subscribe to:
Posts (Atom)