
பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு :)
பின் குறிப்பு: எங்களுக்கெல்லாம் ரொம்ப காலம் முன்பே மின்னிய, எங்கள் பள்ளியின் இன்னொரு நட்சத்திரம் நம்ம குழலி என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன் :)
நம் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என்னைப் பாதிக்கையில், நான் சொல்ல நினைப்பவை இவை...


அன்புள்ள அப்பாவுக்கு,
நலம், நலம் காண நாட்டம். நான் தீபாவளிக்கு மாமா பரமசிவம் ஊருக்கு சென்றிருந்தேன். அவர் சைக்கிளையும் எடுத்து வந்துள்ளேன். என்னிடம் இப்போது பணம் இல்லை. உடனடியாக பணம் ரூ. 40 அனுப்பி வைக்கவும்.
பிற பின்பு.
இப்படிக்கு,
M. Sivasamy
முகவரி:-
மா. சிவசாமி,
I B.A
வரிசை எண் 437
சரபோஸி கல்லூரி
தஞ்சை
வழக்கமான டெம்ளேட்டில் ஒரு வரி சேர்த்திருக்கிறார்! வீட்டில் எல்லோரையும் மொத்தமாய் அழைத்து, இந்த கடிதத்தைக் காண்பித்து அப்பாவிடம் நியாயம் கேட்டதற்கு...
:))
வேறென்ன செய்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்!
எல்லா அப்பாக்களுமே மகனாய் இருந்தவர்கள்தானே :)
அருள்,
நாம் பழகிய இந்த மூன்றாண்டுகளில் நினைவுகளைப் புரட்டிப் பார்த்து
மகிழும் அளவிற்கு நம் நட்பு உருவாகவில்லை என்பதே உண்மை!
உன்னுடன் நான் பேசும்போதெல்லாம் ஊசியில் நூல் கோர்ப்பது போலவே நிதானமாய் வார்த்தைகளை விடுவேன். ஏன் என்றால் எந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்கு இது வரை புரிந்ததில்லை. I year-ல் hostel-ல் 'அறைந்தது' இன்னும் என் நினைவுகளில். மேலும் இந்த வருடம் பொன்னுசாமி மூலம் வந்த கடித பிரச்சனை இவையெல்லாம் நான் விசாரிக்கப்படாமலேயே நீ தண்டித்த குற்றங்கள்.
இவையெல்லாம் உன்னிடம் இருந்து என்னை மனதளவில் மட்டுமல்ல நடைமுறையிலும் பிரித்து வைத்திருந்தது. எப்படிப் பழகினால் உன்னிடம் நட்பை பெறலாம் என்பதை விட எப்படி பழகினால் உன்னிடம் வெறுப்பை பெறாமல் இருப்பேன் என்றே இதுவரை நினைத்து பழகி வந்தேன்.
என் சார்பாகவும் நம்மைச் சார்ந்த நண்பர்கள் சார்பாகவும் உன்னிடம் ஒரு வேண்டுகோள். நாக்கின் நீளம் வெறும் ஆறு இன்ச் தான். ஆனால் அது ஆறடி மனிதனையே கொன்றுவிடும். எனவே பேசும்முன் சற்று சிந்தித்துப் பேசு!
என் மீது நீ/ அன்பு செலுத்தாததைப்பற்றி/ எனக்கு கவலையில்லை/ அன்பு செலுத்துவதை/ ஓவியங்களில் இருந்தாவது/ கற்றுக் கொள்கிறாயே அது போதும் எனக்கு/ அந்த நல்ல நேசம்/ நகர்ந்து நகர்ந்து/ மனிதனிடத்திலும்/ மையம் கொள்ளட்டும்!