ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரு கேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன். என்ன கேள்வி இது? என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை? என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், தயவுசெய்து எனது எண்ணங்களை பரிசீலனை செய்யும் மனநிலையில் மேற்கொண்டு தொடரவும். எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.
சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமா? எல்லா விஷயங்களைப்போலவே சாதியிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயத்தில் குறை இருந்தால் அந்த விஷயத்தை அறவே நீக்குவதுதான் அதற்குத் தீர்வா? சாதியை அழிக்க நாம் எடுத்த முயற்சிகளில் ஒரு சதவிகிதமாவது அதிலிருக்கும் குறைகளை நீக்க முற்பட்டிருந்தால், நல்ல முன்னேற்றம் கண்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.
இயல்பாகவே குழுமனப்பாண்மை கொண்டவன் மனிதன். சாதி என்றில்லை. எப்போதும் ஏதாவது ஒரு குழுவை சார்ந்தே அவன் இருக்கிறான். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்யத்தவறினால், வகுப்புக்கு வந்ததும் நாம் செய்யும் முதல் வேலை என்ன? நம்மைப்போலவே இன்னும் யாராவது வீட்டுப்படம் செய்யாமலிருக்கிறார்களா எனத் தேடுவதுதானே! அப்படி யாரேனும் இருந்துவிட்டால் நமக்கு ஒருவித தைரியமும் தெம்பும் வருவது உண்மைதானே. குழந்தைப்பருவத்திலிருந்து, எந்த பிரச்சனையிலும் நமது முதல்கட்ட நடவடிக்கை நம்மைப்போல் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டுவதாகத்தானே இருக்கிறது. இந்த உணர்வு வாழ்வின் கடைசிவரை, நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனையிலும் வரத்தானே செய்கிறது?!
சாதிகள் தவிர, குடியிருப்போர் நலசங்கம் தொடங்கி தொழிலாளி முதலாளி சங்கங்கள் வரை, வேறெந்த வடிவத்திலும் குழுவாய் இயங்கும்
மனிதர்களை நாம் அங்கீகரிக்கிறோம். இந்தக் குழுக்களிலும் வெட்டு குத்து வரை எல்லா பிரச்சனைகளும் இருக்கத்தானே செய்கின்றன? இதற்கும்
மேல், முதலாலளி தொழிலாளிகளுக்கு இடையில் தீண்டாமை இருந்துகூட நான் பார்த்திருக்கிறேன்! ஒரு தொழிலாளியின் பிரச்சனை சக
தொழிலாளிக்குதான் புரியும் என்று ஒன்றுசேர்வது சரியெனில், ஒரு குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்தவர் தன் பிரச்சனைகளை உணர்ந்த தங்கள்
சாதியினருடன் இணைந்து செயல்படுவதும் சரியே!
எனக்குத் தெரிந்து சாதியினால் நிகழும் மிகக் கேவலமான விஷயம் அவற்றுள் ஏற்றத்தாழ்வு பார்த்து சக மனிதனை இழிவாய் நடத்தும் விஷயம் தான். அதற்கான தீர்வு, கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான். இன்றைக்கு இப்படி உயர்ந்தவர்களிடம் தீண்டாமை போன்ற கேவலங்கள் இல்லாதிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். தலித் மக்களை வீட்டுக்குள் சேர்க்காத ஊரிலிருந்து வந்த எனக்கு, ஒரு தலித் நபர் உற்ற நண்பனாகவும், அறைத்தோழனாகவும் இருக்க இந்தத் தலைமுறையில் வாய்த்திருக்கிறது. சமூகத்தில் அவர்களின் முன்னேற்றம், சாதியினால் நிகழும் கேவலங்களுக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.
மேலும், 'சாதி வேண்டாம். சாதியை ஒழிப்போம்' என்று சொல்பவர்கள் பெரும்பாலும் சதியினால் பாதிக்கப்படாதவர்களாகவும், அதனால் எதையும் இழக்காதவர்களாகவுமே இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் உள்ளுக்குள் சாதி பார்த்தே சகல காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை. என்னிலிருந்தே இதை நான் புரிந்துகொண்டேன்!
சாதிய உணர்வு கொண்டு போராடும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?!' என்று கேட்டார். அவர் கருத்தை ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை!
இவையெல்லாவற்றையும் விட என்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விஷயம் - தேசிய உணர்வை 100% சரியென்கிற நாம், சாதிய உணர்வை 100% தவறென்று ஏன் சொல்கிறோம்? தன்னுள் கொண்டிருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை தவிர்த்து, இரண்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தையாவது யாரவது சொல்ல இயலுமா? 'அவன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுது?' என்று சாதிச்சண்டைகளைச் சாடியவர்கள் கார்கில் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தபோது அதே கேள்வி என்னைக் குடைந்து, 'பாக்கிஸ்தானி உடம்புல மட்டும் பச்சை ரத்தம் ஓடுதா என்ன?' என்று கேட்கவைத்தது. இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?
சுருங்கச் சொல்வதென்றால், சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்களிடம் எந்த சிறப்பும் இல்லை; சாதிய உணர்வுள்ளவர்களிடம் எந்த தாழ்வும் இல்லை என்றே அறிகிறேன்! அதது அவரவர் சூழல் சார்ந்தது.
நம் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என்னைப் பாதிக்கையில், நான் சொல்ல நினைப்பவை இவை...
Tuesday, November 21, 2006
Monday, November 20, 2006
திருமண வாழ்க்கை கசப்பானதா?!
"உனக்கெல்லாம் பரவாயில்லை. எங்களையெல்லாம் பாத்து கொஞ்சம் தெளிவாயிருப்ப! நாங்க தான், கண்ணக்கட்டி காத்துல விட்டமாதிரி மாட்டிகிட்டு தவிச்சோம்..." - என் நண்பர்கள் வட்டத்தில், முதல் சுற்றிலேயே திருமணம் செய்துகொண்ட ஒருவனின் வழக்கமான புலம்பல் இது! மிக உண்மையும் கூட.
இதில் ஆண், பெண்னென்ற பேதமில்லை. "எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சிக்காத அருள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கோ அவ்வளவு பிரச்சனை இருக்கு மேரேஜ் லைஃப்ல" - என் கல்யாணக்கனவுகள் தெரிந்த ஒரு தோழியின் அட்வைஸ் இது! முன்னதை விட முக்கியமான உண்மை இது.
வண்ணவண்ணக் கனவுகளுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து, அங்கே முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை எதிர்கொண்ட நண்பர்களின் தவிப்பிலிருந்து நான் கொஞ்சம் தெளிவடைந்திருப்பது உண்மை. பொதுவாக, 'உங்க வீடு; எங்கவீடு, உங்க அப்பாம்மா; எங்க அப்பாம்மா' என்கிற மனோபாவம் இருக்கிறவரை இவர்களின் பிரச்சனைகளும் சமாளிக்க முடியாதவையாகவே இருக்கின்றன.
இதில் புரியாதது என்னவென்றால், இருதரப்பிலிருந்தும் புலம்பல்களைக் கேட்க நேர்வதுதான். எனில், பிரச்சனைகளுக்கான காரணிகள் பொதுவானவையாகவே இருக்கவேண்டும். இதில் முக்கியமான காரணியாக நான் கருதுவது 'சுதந்திரம்' என்கிற விஷயத்தைத் தான். தங்கள் தரப்பில் மிகத்தேவை என்றுணரும் சுதந்திரத்தை, எதிர்த்தரப்பிலிருந்து மட்டும் யோசிக்காமலேயே பரித்துவிடுகிறார்கள் இருதரப்பினரும்! எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் ஆகிவிடுகின்றன. தமதைப்போலவே பல வருடங்களாக சுமந்துவரப்பட்டிருக்கும் எதிர்த்தரப்பின் எதிர்பார்ப்புகளை என்னவென்றுகூட விசாரிக்காமல், தங்களின் எதிர்பார்ப்புகள் உடைந்துபோவதில் சுயமிழக்கிறார்கள் இருவரும்!
இன்றைய திருமணங்கள் அதிக அளவில் தோள்வியடைவதற்கும், மேற்சொன்ன காரணிகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. பொதுவாக குடும்பம் என்கிற அமைப்பு ஒற்றைத்தலைமையில் இயங்குவது. தாயோ, தந்தையோ, மகனோ அல்லது மகளோ... ஒரு குடும்பத்தின் தலைமை, சூழலுக்கிணங்க மாறி மாறி வெவ்வேறு உறுப்பினர்களிடம் இருக்கலாம். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவர் தலைமையேற்றிருந்தால் மட்டுமே குடும்பம் சிறக்கும். ஆண்களையே பெரிதும் சார்ந்த சொன்ற தலைமுறைகளில் இதில் அதிகம் பிரச்சனையில்லை. பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.
இன்றைக்கு பெண்களும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள். அந்த உணர்வை மனதளவிலாவது ஆண்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இந்தச் சூழலுக்குப் பொருந்தவியலாத பழைய குடும்ப அமைப்பைத் தொடரவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் தவிக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இதற்கு ஒரே தீர்வாய் நான் நினைப்பது, கனவன் மனைவிக்கிடையிலான நட்புணர்வு. கனவன்-மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகளுடனும் நட்புறவாய்ப் பழகுதலே இன்றைய சூழலுக்குச் சிறந்தது. ஆமாம்! இந்தத் தலைமுறை குழந்தைகளும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்தேயிருக்கிறார்கள். மற்ற எல்லா உறவுகளையும் விட, நட்பில் சுதந்திரத்தின் அளவு அதிகமென்பதாலேயே இக்கால குடும்ப அமைப்புக்கு இதுவே சிறந்ததென்று தோன்றுகிறது.
சில மாதங்களுக்கு முன், அலுவலக வேலையாக சேலம் சென்று, என் தோழி அகிலாவின் வீட்டில் தங்க நேர்ந்தபோது இந்த எண்ணம் மிகவும் வலுப்பட்டது. நம்புங்கள்! அவர்கள் வீட்டில் அனைவரும் இப்படி நட்புணர்வுடன்தான் பழகிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் சுதந்திரத்தை மற்றவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அகிலாவும் அவர் கணவர் அமீரும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயங்களிலும், தொலைபேசி உரையாடல்களிலும் ஏற்கனவே ஓரளவு அறிந்திருந்தாலும் நேரில் பார்க்க மிக பிரப்பாய் இருந்தது எனக்கு.
வெவ்வேறு வயதில் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து தங்கியிருப்பது போலத்தான் இருக்கிறது அவர்கள் வீடு. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் இவர்கள் வீட்டுக்கு வந்தால், ஏதோ ஒரு கல்லூரியின் பூங்காவில் நண்பர்களைச் சந்திக்க வந்தவர்கள் மாதிரி ஆளே மாறிவிடுகிறார்கள்!
அந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் ஏற்காடு சென்றுவரலாம் என்று திட்டம் இருந்தது. அகிலாவின் மாமியார், தான் வரவில்லை என்று சொன்னதும், 'உங்கள ஒன்னும் மலமேலேர்ந்து தள்ளிவிட்டுட மாட்டேம்மா... நான் அவ்ளோ கொடுமக்காரி இல்ல. பயப்படாம வாங்க!' என்று கலாய்க்கிறார் அகிலா! இத்தனைக்கும் அவர் பார்த்துவைத்த மருமகள் இல்லை இவர்! இவர்களுடையது மதங்களைக் கடந்த காதல் திருமணம்.
இந்தக் குடும்பத்தில் அமீர் அம்மாவின் புரிதல்கள் மிக முக்கியமானவை. அவருடன் பொறுமையாக பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தில், உறவினர்கள் தன் மருமகள் பற்றி தன்னிடம் முன்வைக்கும் புகார்கள் பற்றியும் அவற்றை அவர் நாசூக்காகப் புறந்தள்ளும் விதம்பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவகிட்ட கொறையே இல்லன்னு சொல்லல தம்பி... ஆனா அதே போல நானும் எல்லாத்தையும் சரியா பண்றேன்னு சொல்லமுடியாது இல்லையா? ரெண்டுபேரும் வெளிப்படையா கேட்டுக்குவோம். அதோட அந்த பிரச்சனை முடிஞ்சிடும்...' என்றவரை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இருவரும் சேர்ந்து சேலத்திலேயே ஒரு அழகான வீடு வாங்கியிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் மகன்-ரியாஸ்; நடக்க ஆரம்பித்திருக்கும் மகள்-ரோஷினி. மனசு நிறைந்த வாழ்க்கை. நான் கனவுகண்ட வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்கிற அந்தக் குடும்பத்தைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. அதை அவர்களிடமே சொன்னேன். எனக்கும் அப்படி அமைய வாழ்த்தினார்கள்!
ஞாயிறு காலையில் ஏற்காடு புறப்பட்ட எங்களுக்காக சிக்கன் பிரியாணி செய்து ஹாட் பாக்ஸில் வைத்துத்தந்தார் அம்மா. இருசக்கர வாகனங்களில் கிளம்பினோம். ரியாஸ் என்னுடன் வர, அவர்கள் மூவரும் ஒரு வண்டியில்.
மலைப்பாதையில் ஏற ஆரம்பித்ததும் ரியாஸ் தன் இஷ்டத்திற்கு கத்த ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சற்றைக்கெல்லாம் பின்னல் இன்னும் யாரோ கத்திக்கொண்டுவரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தால்... அமீரும் அகிலாவும்! என்னவெற்றே புரியாமல் ரோஷிணியும் அவளால் முடிந்த அளவு கத்திக்கொண்டு வருகிறாள்!! வழி நெடுக ரியாஸ் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தார் அமீர்.
மலைமேல் நன்றாக சுற்றிவிட்டு ஒரு பூங்காவில் அமர்ந்து பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம். அமீரின் அம்மாவை மறந்தாலும் அவர் செய்துகொடுத்த பிரியாணியை மறக்கவே முடியாது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் மகனும் பூங்கவிலேயே ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ரியாஸ் எவ்வளவோ முயன்றும் அமீரைப் பிடிக்க முடியவில்லை. களைத்துச் சோர்ந்த மகனைப் பார்த்து 'என்னடா இவர பிடிக்க முடியலங்கற... இரு நானும் வரேன்...' என்று அகிலாவும் சேர்ந்துகொள்ள, இருவருக்கும் பிடிகொடுக்காமல் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார் அமீர். நானும் ரோஷினியும் அவர்கள் விளையாட்டை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தோம். வழக்கமாக, மிகைப்படுத்தப்பட்ட சினாமாக் காட்சிகளில் மட்டுமே இப்படிப் பார்த்திருக்கிறேன்! உண்மையில் எல்லோருக்குள்ளும் இப்படிப்பட்ட ஆசைகள் இருக்கின்றன என்றாலும் எத்தனைபேர் நடைமுறைப்படுத்துகிறோம்?
வீடுதிரும்பி, இரவு சாப்பிட்டு முடித்து எல்லோருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். காதல் திருமணத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வீடுவாங்கி குடிபுகுந்ததுவரை இவர்கள் சந்தித்த எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சு சென்றது. திருமணமான புதிதில் மதமாற்றம், பெயர்மாற்றம் என ஆரம்பித்து இருவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். பொதுவாக நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் அவர்கள் வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றன. நாமெல்லாம் பிரச்சனைகளிளேயே இருந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் அவற்றைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்!
உதாரணத்திற்கு ஒன்று: புதுவீட்டிற்கு இஸ்லாமிய முறைப்படி எல்லாம் செய்தபின்னும், கணபதி ஹோமம் செய்தால் தன் மனதிற்கு நிறைவாய் இருக்கும் என்று அகிலா நினைத்திருக்கிறார். அதை அவர் கணவர் மூலமாகக் கொண்டுசெல்லாமல், 'உங்களுக்கு கஷ்டமாயில்லன்னா செஞ்சிக்கலாமாம்மா...?' என்று நேரடியாக மாமியாரிடம் கேட்டிருக்கிறார். வேண்டாமென்றுவிட்டால் அது காலத்திற்கும் மருமகள் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் என்று நினைத்து, தன் உறவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கணபதி ஹோமத்திற்கு அனுமதித்திருக்கிறார் அவர். இப்படி இவர்கள் கடந்துவந்த ஒவ்வொரு பிரச்சனையும் நம் மனதின் ஏதேதோ தாழ்களைத் திறந்துவிட்டுக்கொண்டே செல்கின்றன. உடனிருக்கும் மனித மனங்களைத்தாண்டி வேறெதுவும் பெரிதில்லை என்று இவர்கள் எப்படிக்கற்றார்கள் எனத்தெரியவில்லை!
எனக்கு நேரமாகிவிட, கிளம்ப ஆயத்தமானேன். எல்லோருமாக வாசல் வந்து வழியனுப்பினார்கள். நான் பொதுவாக சொல்லிக்கொண்டு கிளம்பினேன்,
'உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க..!'
பூங்கா நவம்பர் 27, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண், பெண்னென்ற பேதமில்லை. "எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சிக்காத அருள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கோ அவ்வளவு பிரச்சனை இருக்கு மேரேஜ் லைஃப்ல" - என் கல்யாணக்கனவுகள் தெரிந்த ஒரு தோழியின் அட்வைஸ் இது! முன்னதை விட முக்கியமான உண்மை இது.
வண்ணவண்ணக் கனவுகளுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து, அங்கே முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை எதிர்கொண்ட நண்பர்களின் தவிப்பிலிருந்து நான் கொஞ்சம் தெளிவடைந்திருப்பது உண்மை. பொதுவாக, 'உங்க வீடு; எங்கவீடு, உங்க அப்பாம்மா; எங்க அப்பாம்மா' என்கிற மனோபாவம் இருக்கிறவரை இவர்களின் பிரச்சனைகளும் சமாளிக்க முடியாதவையாகவே இருக்கின்றன.
இதில் புரியாதது என்னவென்றால், இருதரப்பிலிருந்தும் புலம்பல்களைக் கேட்க நேர்வதுதான். எனில், பிரச்சனைகளுக்கான காரணிகள் பொதுவானவையாகவே இருக்கவேண்டும். இதில் முக்கியமான காரணியாக நான் கருதுவது 'சுதந்திரம்' என்கிற விஷயத்தைத் தான். தங்கள் தரப்பில் மிகத்தேவை என்றுணரும் சுதந்திரத்தை, எதிர்த்தரப்பிலிருந்து மட்டும் யோசிக்காமலேயே பரித்துவிடுகிறார்கள் இருதரப்பினரும்! எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் ஆகிவிடுகின்றன. தமதைப்போலவே பல வருடங்களாக சுமந்துவரப்பட்டிருக்கும் எதிர்த்தரப்பின் எதிர்பார்ப்புகளை என்னவென்றுகூட விசாரிக்காமல், தங்களின் எதிர்பார்ப்புகள் உடைந்துபோவதில் சுயமிழக்கிறார்கள் இருவரும்!
இன்றைய திருமணங்கள் அதிக அளவில் தோள்வியடைவதற்கும், மேற்சொன்ன காரணிகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. பொதுவாக குடும்பம் என்கிற அமைப்பு ஒற்றைத்தலைமையில் இயங்குவது. தாயோ, தந்தையோ, மகனோ அல்லது மகளோ... ஒரு குடும்பத்தின் தலைமை, சூழலுக்கிணங்க மாறி மாறி வெவ்வேறு உறுப்பினர்களிடம் இருக்கலாம். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவர் தலைமையேற்றிருந்தால் மட்டுமே குடும்பம் சிறக்கும். ஆண்களையே பெரிதும் சார்ந்த சொன்ற தலைமுறைகளில் இதில் அதிகம் பிரச்சனையில்லை. பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.
இன்றைக்கு பெண்களும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள். அந்த உணர்வை மனதளவிலாவது ஆண்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இந்தச் சூழலுக்குப் பொருந்தவியலாத பழைய குடும்ப அமைப்பைத் தொடரவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் தவிக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இதற்கு ஒரே தீர்வாய் நான் நினைப்பது, கனவன் மனைவிக்கிடையிலான நட்புணர்வு. கனவன்-மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகளுடனும் நட்புறவாய்ப் பழகுதலே இன்றைய சூழலுக்குச் சிறந்தது. ஆமாம்! இந்தத் தலைமுறை குழந்தைகளும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்தேயிருக்கிறார்கள். மற்ற எல்லா உறவுகளையும் விட, நட்பில் சுதந்திரத்தின் அளவு அதிகமென்பதாலேயே இக்கால குடும்ப அமைப்புக்கு இதுவே சிறந்ததென்று தோன்றுகிறது.
சில மாதங்களுக்கு முன், அலுவலக வேலையாக சேலம் சென்று, என் தோழி அகிலாவின் வீட்டில் தங்க நேர்ந்தபோது இந்த எண்ணம் மிகவும் வலுப்பட்டது. நம்புங்கள்! அவர்கள் வீட்டில் அனைவரும் இப்படி நட்புணர்வுடன்தான் பழகிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் சுதந்திரத்தை மற்றவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அகிலாவும் அவர் கணவர் அமீரும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயங்களிலும், தொலைபேசி உரையாடல்களிலும் ஏற்கனவே ஓரளவு அறிந்திருந்தாலும் நேரில் பார்க்க மிக பிரப்பாய் இருந்தது எனக்கு.
வெவ்வேறு வயதில் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து தங்கியிருப்பது போலத்தான் இருக்கிறது அவர்கள் வீடு. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் இவர்கள் வீட்டுக்கு வந்தால், ஏதோ ஒரு கல்லூரியின் பூங்காவில் நண்பர்களைச் சந்திக்க வந்தவர்கள் மாதிரி ஆளே மாறிவிடுகிறார்கள்!
அந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் ஏற்காடு சென்றுவரலாம் என்று திட்டம் இருந்தது. அகிலாவின் மாமியார், தான் வரவில்லை என்று சொன்னதும், 'உங்கள ஒன்னும் மலமேலேர்ந்து தள்ளிவிட்டுட மாட்டேம்மா... நான் அவ்ளோ கொடுமக்காரி இல்ல. பயப்படாம வாங்க!' என்று கலாய்க்கிறார் அகிலா! இத்தனைக்கும் அவர் பார்த்துவைத்த மருமகள் இல்லை இவர்! இவர்களுடையது மதங்களைக் கடந்த காதல் திருமணம்.
இந்தக் குடும்பத்தில் அமீர் அம்மாவின் புரிதல்கள் மிக முக்கியமானவை. அவருடன் பொறுமையாக பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தில், உறவினர்கள் தன் மருமகள் பற்றி தன்னிடம் முன்வைக்கும் புகார்கள் பற்றியும் அவற்றை அவர் நாசூக்காகப் புறந்தள்ளும் விதம்பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவகிட்ட கொறையே இல்லன்னு சொல்லல தம்பி... ஆனா அதே போல நானும் எல்லாத்தையும் சரியா பண்றேன்னு சொல்லமுடியாது இல்லையா? ரெண்டுபேரும் வெளிப்படையா கேட்டுக்குவோம். அதோட அந்த பிரச்சனை முடிஞ்சிடும்...' என்றவரை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இருவரும் சேர்ந்து சேலத்திலேயே ஒரு அழகான வீடு வாங்கியிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் மகன்-ரியாஸ்; நடக்க ஆரம்பித்திருக்கும் மகள்-ரோஷினி. மனசு நிறைந்த வாழ்க்கை. நான் கனவுகண்ட வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்கிற அந்தக் குடும்பத்தைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. அதை அவர்களிடமே சொன்னேன். எனக்கும் அப்படி அமைய வாழ்த்தினார்கள்!
ஞாயிறு காலையில் ஏற்காடு புறப்பட்ட எங்களுக்காக சிக்கன் பிரியாணி செய்து ஹாட் பாக்ஸில் வைத்துத்தந்தார் அம்மா. இருசக்கர வாகனங்களில் கிளம்பினோம். ரியாஸ் என்னுடன் வர, அவர்கள் மூவரும் ஒரு வண்டியில்.
மலைப்பாதையில் ஏற ஆரம்பித்ததும் ரியாஸ் தன் இஷ்டத்திற்கு கத்த ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சற்றைக்கெல்லாம் பின்னல் இன்னும் யாரோ கத்திக்கொண்டுவரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தால்... அமீரும் அகிலாவும்! என்னவெற்றே புரியாமல் ரோஷிணியும் அவளால் முடிந்த அளவு கத்திக்கொண்டு வருகிறாள்!! வழி நெடுக ரியாஸ் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தார் அமீர்.
மலைமேல் நன்றாக சுற்றிவிட்டு ஒரு பூங்காவில் அமர்ந்து பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம். அமீரின் அம்மாவை மறந்தாலும் அவர் செய்துகொடுத்த பிரியாணியை மறக்கவே முடியாது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் மகனும் பூங்கவிலேயே ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ரியாஸ் எவ்வளவோ முயன்றும் அமீரைப் பிடிக்க முடியவில்லை. களைத்துச் சோர்ந்த மகனைப் பார்த்து 'என்னடா இவர பிடிக்க முடியலங்கற... இரு நானும் வரேன்...' என்று அகிலாவும் சேர்ந்துகொள்ள, இருவருக்கும் பிடிகொடுக்காமல் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார் அமீர். நானும் ரோஷினியும் அவர்கள் விளையாட்டை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தோம். வழக்கமாக, மிகைப்படுத்தப்பட்ட சினாமாக் காட்சிகளில் மட்டுமே இப்படிப் பார்த்திருக்கிறேன்! உண்மையில் எல்லோருக்குள்ளும் இப்படிப்பட்ட ஆசைகள் இருக்கின்றன என்றாலும் எத்தனைபேர் நடைமுறைப்படுத்துகிறோம்?
வீடுதிரும்பி, இரவு சாப்பிட்டு முடித்து எல்லோருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். காதல் திருமணத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வீடுவாங்கி குடிபுகுந்ததுவரை இவர்கள் சந்தித்த எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சு சென்றது. திருமணமான புதிதில் மதமாற்றம், பெயர்மாற்றம் என ஆரம்பித்து இருவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். பொதுவாக நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் அவர்கள் வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றன. நாமெல்லாம் பிரச்சனைகளிளேயே இருந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் அவற்றைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்!
உதாரணத்திற்கு ஒன்று: புதுவீட்டிற்கு இஸ்லாமிய முறைப்படி எல்லாம் செய்தபின்னும், கணபதி ஹோமம் செய்தால் தன் மனதிற்கு நிறைவாய் இருக்கும் என்று அகிலா நினைத்திருக்கிறார். அதை அவர் கணவர் மூலமாகக் கொண்டுசெல்லாமல், 'உங்களுக்கு கஷ்டமாயில்லன்னா செஞ்சிக்கலாமாம்மா...?' என்று நேரடியாக மாமியாரிடம் கேட்டிருக்கிறார். வேண்டாமென்றுவிட்டால் அது காலத்திற்கும் மருமகள் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் என்று நினைத்து, தன் உறவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கணபதி ஹோமத்திற்கு அனுமதித்திருக்கிறார் அவர். இப்படி இவர்கள் கடந்துவந்த ஒவ்வொரு பிரச்சனையும் நம் மனதின் ஏதேதோ தாழ்களைத் திறந்துவிட்டுக்கொண்டே செல்கின்றன. உடனிருக்கும் மனித மனங்களைத்தாண்டி வேறெதுவும் பெரிதில்லை என்று இவர்கள் எப்படிக்கற்றார்கள் எனத்தெரியவில்லை!
எனக்கு நேரமாகிவிட, கிளம்ப ஆயத்தமானேன். எல்லோருமாக வாசல் வந்து வழியனுப்பினார்கள். நான் பொதுவாக சொல்லிக்கொண்டு கிளம்பினேன்,
'உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க..!'
பூங்கா நவம்பர் 27, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
புது ஆட்டம்
கவிஞர் ஆதவன் தீட்சண்யா குறித்த சரியான அறிமுகங்கள் எனக்கு இல்லாததால், புத்தக நிலையங்களில் பலமுறை இவரின் புத்தகங்களை ஆர்வமில்லாமல் ஒதுக்கிச் சென்றிருக்கிறேன். ஆனால், செல்வநாயகி அவர்களின் 'ரோடும் ரோடு சார்ந்ததும்...' என்ற பதிவில் சேமிக்கப்பட்டிருந்த ஆதவன் தீட்சண்யாவின் பேட்டி, அவரின் புத்தகங்களைத் தேடிப்படிக்க வைத்துவிட்டது.
சென்றமாதம் தி. நகர் சென்றிருந்தபோது new book lands-ல் இவரின் புத்தகங்களைத் தேடினேன். 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' இரண்டு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வலியை, அதனால் எழுந்த அவர் எழுத்தின் தீவிரத்தை வேறு எப்படிச்சொல்வதைவிடவும், 'தந்துகி' தொகுப்பிலிருக்கும் அவரின் முன்னுரைய உங்களுக்கு படிக்கக்கொடுப்பதே சிறந்தது எனத்தோன்றியதால்...
"அடியில் ஒப்பமிட்டுள்ள ஆதவன் தீட்சண்யாவாகிய என்னால் பூரண சித்த சுவாதீனத்துடன் எழுதப்பட்ட கவிதைகளின் மூன்றாம் தொகுப்பிது.
எது கவிதை யார் கவிஞன் என்று சஞ்சாரம் பண்ணும் முடிவுகளெதுவும் என்னோடு கலந்தாலோசித்து எடுக்கப்படாததால் அதுபற்றிய யாதொரு நிபந்தனையும் நம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், முறையான தாக்கலோ தகவலோ இல்லாமல் இதன்பேரில் ஒருதலைப்பட்சமாய் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் செல்லாதவை என்றும் அறிவித்து ரத்து செய்யப்படுகிறது.
கவிதையின் சொல் பொருள் ஏதேனும் தம்மை புண்படுத்துவதாய் யாரேனும் கருதும்பட்சம் அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேனென்றும், இதுகாறும் அவர் கைக்கொண்டு பரிபாலிக்கும் தீம்பான சிந்தனைகளுக்கும் காரியங்களுக்கும் பிராயசித்தமாக வியாகுலங் கொள்ளவும் அவமானப்படவும் முழுப் பொருத்தம் கொண்டவராகிறார் என்றும் வாசகரறிக.
எல்லாம் வல்ல தங்களின் கடவுள் பல கவிதைகளில் என்னிடம் சின்னப்பட்டு சேதாரமாகுதல் கண்டு பக்தர்கள் பதற வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உவப்பானவற்றிலிருந்து அல்லாமல் கசப்பானவற்றிலிருந்தே நான் எழுத நேர்ந்தது ஏனென்றும், கழுத்திலிருந்து கழற்றியெறிந்த எச்சில் கலயம் தலைமுறைகள் தாண்டி கனவிலும் கனப்பது குறித்தும், இன்னும் இப்படியாக எங்கள் இருவருக்குமிடையில் அனேக வியாஜ்ஜியங்களுண்டு. அதற்கு அவர் பொறுப்பு சொல்லிவிட்டு தன்னை விடுவித்துக் கொள்வதில் நமக்கு யாதொரு ஆட்சேபமுமில்லை. "
இந்த முன்னுரை, பின்வரும் கவிதை மற்றும் அவரின் எழுத்துகள் அனைத்திலுமிருக்கும் திமிர் எனக்குப் பிடித்திருந்தது. வெறுமனே புலப்பிக் கொண்டிருக்காமல், காலங்காலமாய் தன்னைப் புறக்கணித்தவர்களை, 'நீயென்ன என்னைப் புறக்கணிப்பது. நான் புறக்கணிக்கிறேன் உன்னை' என்று எதிர்கொள்கிற விதம் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. கவிதைகளின் வடிவம் பற்றி அவர் எங்கும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆனாலும் அந்தந்த கவிதைக்கு அவர் கொடுத்திருக்கும் வடிவங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.
'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்' தொகுப்பின் பின்னட்டைக் கவிதை:
'என்னை கருவுற்றிருந்த மசக்கையில்
சென்றமாதம் தி. நகர் சென்றிருந்தபோது new book lands-ல் இவரின் புத்தகங்களைத் தேடினேன். 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' இரண்டு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வலியை, அதனால் எழுந்த அவர் எழுத்தின் தீவிரத்தை வேறு எப்படிச்சொல்வதைவிடவும், 'தந்துகி' தொகுப்பிலிருக்கும் அவரின் முன்னுரைய உங்களுக்கு படிக்கக்கொடுப்பதே சிறந்தது எனத்தோன்றியதால்...
"அடியில் ஒப்பமிட்டுள்ள ஆதவன் தீட்சண்யாவாகிய என்னால் பூரண சித்த சுவாதீனத்துடன் எழுதப்பட்ட கவிதைகளின் மூன்றாம் தொகுப்பிது.
எது கவிதை யார் கவிஞன் என்று சஞ்சாரம் பண்ணும் முடிவுகளெதுவும் என்னோடு கலந்தாலோசித்து எடுக்கப்படாததால் அதுபற்றிய யாதொரு நிபந்தனையும் நம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், முறையான தாக்கலோ தகவலோ இல்லாமல் இதன்பேரில் ஒருதலைப்பட்சமாய் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் செல்லாதவை என்றும் அறிவித்து ரத்து செய்யப்படுகிறது.
கவிதையின் சொல் பொருள் ஏதேனும் தம்மை புண்படுத்துவதாய் யாரேனும் கருதும்பட்சம் அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேனென்றும், இதுகாறும் அவர் கைக்கொண்டு பரிபாலிக்கும் தீம்பான சிந்தனைகளுக்கும் காரியங்களுக்கும் பிராயசித்தமாக வியாகுலங் கொள்ளவும் அவமானப்படவும் முழுப் பொருத்தம் கொண்டவராகிறார் என்றும் வாசகரறிக.
எல்லாம் வல்ல தங்களின் கடவுள் பல கவிதைகளில் என்னிடம் சின்னப்பட்டு சேதாரமாகுதல் கண்டு பக்தர்கள் பதற வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உவப்பானவற்றிலிருந்து அல்லாமல் கசப்பானவற்றிலிருந்தே நான் எழுத நேர்ந்தது ஏனென்றும், கழுத்திலிருந்து கழற்றியெறிந்த எச்சில் கலயம் தலைமுறைகள் தாண்டி கனவிலும் கனப்பது குறித்தும், இன்னும் இப்படியாக எங்கள் இருவருக்குமிடையில் அனேக வியாஜ்ஜியங்களுண்டு. அதற்கு அவர் பொறுப்பு சொல்லிவிட்டு தன்னை விடுவித்துக் கொள்வதில் நமக்கு யாதொரு ஆட்சேபமுமில்லை. "
இந்த முன்னுரை, பின்வரும் கவிதை மற்றும் அவரின் எழுத்துகள் அனைத்திலுமிருக்கும் திமிர் எனக்குப் பிடித்திருந்தது. வெறுமனே புலப்பிக் கொண்டிருக்காமல், காலங்காலமாய் தன்னைப் புறக்கணித்தவர்களை, 'நீயென்ன என்னைப் புறக்கணிப்பது. நான் புறக்கணிக்கிறேன் உன்னை' என்று எதிர்கொள்கிற விதம் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. கவிதைகளின் வடிவம் பற்றி அவர் எங்கும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆனாலும் அந்தந்த கவிதைக்கு அவர் கொடுத்திருக்கும் வடிவங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.
'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்' தொகுப்பின் பின்னட்டைக் கவிதை:
'என்னை கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?
தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?
எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?
எங்களுக்கான பங்கை ஒதுக்கச் சொல்லியல்ல
எடுத்துக் கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்
அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம்'
'புது ஆட்டம்' கவிதையில் சலுகைகள் மற்றும் திறமைகள் பற்றி இவர் சொல்லும் விஷயம் சில புதிய கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.
'நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை' - என்ற முடிவுடன் துவங்கும் இக்கவிதையில்,
'இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது' - என்று தன் சமூகம் கொண்டிருக்கும் தகுதி மற்றும் திறமைகள் மீதான நம்பிக்கையுடன் புதிய ஆட்டத்திற்கு துணிச்சலுடன் அழைக்கிறார்.
பல இடங்களில் வன்மையான சொற்களைக் கையாண்டிருந்தாலும், அவர் தரப்பின் நியாயங்களை உணரும்பட்சத்தில் அவை ஒன்றுமேயில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அனேக கவிதைகள் மேற்சொன்ன விஷயம் பற்றியவையே என்றாலும், வேறுசில உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளும் இரு தொகுப்பிலுமே காணப்படுகின்றன.
மாதிரிக்கு ஒன்று:
'அரண்மனையில் அந்தப்புரம்
அடர்வனத்தில் லட்சுமணக்கோடு
லங்காபுரிக்குள் அசோகவனம்
எங்கிருந்தாலென்ன
எல்லாமே சிறைதான் சீதைக்கு'
இதனுடன் சேர்ந்த இன்னும் சில கவிதைகளுக்குமாக இவர் கொடுத்திருக்கும் தலைப்பு - 'ம்ணயமாரா'!
நன்றி: 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' - சந்தியா பதிப்பகம்.
தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?
எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?
எங்களுக்கான பங்கை ஒதுக்கச் சொல்லியல்ல
எடுத்துக் கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்
அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம்'
'புது ஆட்டம்' கவிதையில் சலுகைகள் மற்றும் திறமைகள் பற்றி இவர் சொல்லும் விஷயம் சில புதிய கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.
'நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை' - என்ற முடிவுடன் துவங்கும் இக்கவிதையில்,
'இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது' - என்று தன் சமூகம் கொண்டிருக்கும் தகுதி மற்றும் திறமைகள் மீதான நம்பிக்கையுடன் புதிய ஆட்டத்திற்கு துணிச்சலுடன் அழைக்கிறார்.
பல இடங்களில் வன்மையான சொற்களைக் கையாண்டிருந்தாலும், அவர் தரப்பின் நியாயங்களை உணரும்பட்சத்தில் அவை ஒன்றுமேயில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அனேக கவிதைகள் மேற்சொன்ன விஷயம் பற்றியவையே என்றாலும், வேறுசில உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளும் இரு தொகுப்பிலுமே காணப்படுகின்றன.
மாதிரிக்கு ஒன்று:
'அரண்மனையில் அந்தப்புரம்
அடர்வனத்தில் லட்சுமணக்கோடு
லங்காபுரிக்குள் அசோகவனம்
எங்கிருந்தாலென்ன
எல்லாமே சிறைதான் சீதைக்கு'
இதனுடன் சேர்ந்த இன்னும் சில கவிதைகளுக்குமாக இவர் கொடுத்திருக்கும் தலைப்பு - 'ம்ணயமாரா'!
நன்றி: 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' - சந்தியா பதிப்பகம்.
Sunday, November 19, 2006
சொந்தக்கதை
இயக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!
உணர்வின் பதிவுகள் தான் நான் முதலில் ஆரம்பித்த பதிவென்றாலும், நட்சத்திர வாரத்தில் இங்கே எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.
நட்சத்திர அறிமுகமாய் சிலவரிகள் எழுதச்சொல்லியிருந்தார்கள் மதி அவர்கள். நமக்குதான் சுருக்கமாய் நாலுவரியில் எழுதிப் பழக்கமில்லையே. என் இஷ்டத்திற்கு வளவளவென்று எழுதியனுப்பிவிட்டேன். 'இதை உங்கள் நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாய்ப் போட்டுக்கொள்ளுங்கள்... அறிமுகம் சின்னதாய் இருக்கட்டும்' என்று மதி அவர்களிடமிருந்து பதில்! வளவளன்னு எழுதாம சுருக்கித்தா என்பதை டீசண்டாக கேட்கிறார்கள் என நினைத்து,முதலில் எழுதியதையே கொஞ்சம் வெட்டி, ஒட்டி, சுருக்கி அனுப்பினேன். முதலில் எழுதியது நிஜமாவே நல்லா இருந்தது என்றும், அதை சுருக்காமல் அப்படியே முதல் பதிவாய் போடுங்கள் என்றும் மீண்டும் அவரிடமிருந்து பதில்! 'நிஜமாவேவா..?!' என்ற ஆச்சர்யத்துடன் ரொம்ப சுருக்கமாக அறிமுகவரிகள் எழுதியனுப்பிவிட்டேன். அதனால், இப்போது அவரின் பரிந்துரைப்படி முதல் பதிவாய் என் சொந்தக்கதை... :)
அந்தந்த வயதில் கிடைக்கவேண்டியவை, எந்த பிரச்சனையும் இல்லாமல், இலய்பாகவே கிடைத்துவிட்ட மிகச்சாதாரண வாழ்க்கை என்னுடையது. இருப்பினும், எங்கே ஆரம்பித்தது எனத்தெரியாமல், எனது எண்ணங்களும், ஒவ்வொரு விஷயத்தின் மீதான எனது தீர்மானங்களும்(!) நானே அதிர்ச்சிக்குள்ளாகும்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்வுகளைப் பகிர்ந்துகொள்ள எழுந்த ஆர்வமே நான் எழுத ஆரம்பித்திருப்பதற்குக் காரணம்!
தந்தை ஒரு அரசுக்கல்லூரி நூலகர் என்பதாலேயே, கோகுலம் மற்றும் பூந்தலிரிலிருந்து எல்லா பத்திக்கைகளும் தடையின்றி வாசிக்கக் கிடைத்தது என் பாக்கியம்.
பள்ளிப்பருவம் கடலூர் St. Joseph's-ல். இளங்கலை அறிவியல் மயிலாடுதுறை AVC கல்லூரியில். முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் சென்னை Crescent Engg. -ல். இப்படி மூன்று மதங்கள் சார்ந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பும் எத்தேச்சையாகவே அமைந்தது! இதில் நான், என்னில் பெரிதும் மாற்றம் கண்டது AVC கல்லூரியில் தான். அங்கு நாங்கள் நடத்திய மாணவர்கள் இதழான 'இளந்தூது'வும், அக்கல்லூரியின் நுண்கலை மன்றமும், முதன் முதலாய் கிடைத்த ஹாஸ்டல் வாழ்கையும் என் மற்றங்களுக்கு முக்கிய காரணங்கள்.
இலட்சியங்கள் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல், வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, அந்தந்த நிமிடங்களை முழுமையாய் அனுபவிக்க நினைப்பவன் நான். சின்னவயதிலிருந்தே business தான் செய்யவேண்டும் என்ற என் ஆசை, MCA படித்தபின் வேலைக்குப் போவதே சரி என்றிருந்த சூழலில், எந்த ஏமாற்றமும் இல்லாமல் மாறிப்போனதற்கும்; பின் வேலைக்குப் போய் lay-off ஆன சமயத்தில், அதே துறையில் தனாகவே கிடைத்த business வாய்ப்பை மறுதலிப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை, மெற்சொன்ன என் வாழ்க்கை முறையே கொடுத்தது.
அடையாளங்கள் நம் ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு தடையாய் இருப்பதை உணர்ந்து தெளிந்ததால்; கணிப்பொறியாளன், இந்த ஜாதியைச் சேர்ந்தவன், இந்த மதத்தைச் சேர்ந்தவன், இந்தியன், எழுத்தாளன், ஆத்திகன், நாத்திகன்... போன்ற எந்த அடையாளமுமில்லாமல் இருக்கவே ஆசைப்படுகிறேன். 'இப்போது வாழ்வது வாழ்க்கையில்லை, நாம் இறந்தபின் வரலாற்றில் நிற்கும்படி வாழ்வதே வாழ்க்கை' என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை! ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழ்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு நான் பரிந்துரை செய்வது: 'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!' :)
சொல்ல விரும்பும், ஓஷோ அவர்களின் கருத்து ஒன்று:
தட்டத்தேவையில்லை,
திறந்தே இருக்கிறது
கதவு!
உணர்வின் பதிவுகள் தான் நான் முதலில் ஆரம்பித்த பதிவென்றாலும், நட்சத்திர வாரத்தில் இங்கே எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.
நட்சத்திர அறிமுகமாய் சிலவரிகள் எழுதச்சொல்லியிருந்தார்கள் மதி அவர்கள். நமக்குதான் சுருக்கமாய் நாலுவரியில் எழுதிப் பழக்கமில்லையே. என் இஷ்டத்திற்கு வளவளவென்று எழுதியனுப்பிவிட்டேன். 'இதை உங்கள் நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாய்ப் போட்டுக்கொள்ளுங்கள்... அறிமுகம் சின்னதாய் இருக்கட்டும்' என்று மதி அவர்களிடமிருந்து பதில்! வளவளன்னு எழுதாம சுருக்கித்தா என்பதை டீசண்டாக கேட்கிறார்கள் என நினைத்து,முதலில் எழுதியதையே கொஞ்சம் வெட்டி, ஒட்டி, சுருக்கி அனுப்பினேன். முதலில் எழுதியது நிஜமாவே நல்லா இருந்தது என்றும், அதை சுருக்காமல் அப்படியே முதல் பதிவாய் போடுங்கள் என்றும் மீண்டும் அவரிடமிருந்து பதில்! 'நிஜமாவேவா..?!' என்ற ஆச்சர்யத்துடன் ரொம்ப சுருக்கமாக அறிமுகவரிகள் எழுதியனுப்பிவிட்டேன். அதனால், இப்போது அவரின் பரிந்துரைப்படி முதல் பதிவாய் என் சொந்தக்கதை... :)
அந்தந்த வயதில் கிடைக்கவேண்டியவை, எந்த பிரச்சனையும் இல்லாமல், இலய்பாகவே கிடைத்துவிட்ட மிகச்சாதாரண வாழ்க்கை என்னுடையது. இருப்பினும், எங்கே ஆரம்பித்தது எனத்தெரியாமல், எனது எண்ணங்களும், ஒவ்வொரு விஷயத்தின் மீதான எனது தீர்மானங்களும்(!) நானே அதிர்ச்சிக்குள்ளாகும்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்வுகளைப் பகிர்ந்துகொள்ள எழுந்த ஆர்வமே நான் எழுத ஆரம்பித்திருப்பதற்குக் காரணம்!
தந்தை ஒரு அரசுக்கல்லூரி நூலகர் என்பதாலேயே, கோகுலம் மற்றும் பூந்தலிரிலிருந்து எல்லா பத்திக்கைகளும் தடையின்றி வாசிக்கக் கிடைத்தது என் பாக்கியம்.
பள்ளிப்பருவம் கடலூர் St. Joseph's-ல். இளங்கலை அறிவியல் மயிலாடுதுறை AVC கல்லூரியில். முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் சென்னை Crescent Engg. -ல். இப்படி மூன்று மதங்கள் சார்ந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பும் எத்தேச்சையாகவே அமைந்தது! இதில் நான், என்னில் பெரிதும் மாற்றம் கண்டது AVC கல்லூரியில் தான். அங்கு நாங்கள் நடத்திய மாணவர்கள் இதழான 'இளந்தூது'வும், அக்கல்லூரியின் நுண்கலை மன்றமும், முதன் முதலாய் கிடைத்த ஹாஸ்டல் வாழ்கையும் என் மற்றங்களுக்கு முக்கிய காரணங்கள்.
இலட்சியங்கள் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல், வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, அந்தந்த நிமிடங்களை முழுமையாய் அனுபவிக்க நினைப்பவன் நான். சின்னவயதிலிருந்தே business தான் செய்யவேண்டும் என்ற என் ஆசை, MCA படித்தபின் வேலைக்குப் போவதே சரி என்றிருந்த சூழலில், எந்த ஏமாற்றமும் இல்லாமல் மாறிப்போனதற்கும்; பின் வேலைக்குப் போய் lay-off ஆன சமயத்தில், அதே துறையில் தனாகவே கிடைத்த business வாய்ப்பை மறுதலிப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை, மெற்சொன்ன என் வாழ்க்கை முறையே கொடுத்தது.
அடையாளங்கள் நம் ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு தடையாய் இருப்பதை உணர்ந்து தெளிந்ததால்; கணிப்பொறியாளன், இந்த ஜாதியைச் சேர்ந்தவன், இந்த மதத்தைச் சேர்ந்தவன், இந்தியன், எழுத்தாளன், ஆத்திகன், நாத்திகன்... போன்ற எந்த அடையாளமுமில்லாமல் இருக்கவே ஆசைப்படுகிறேன். 'இப்போது வாழ்வது வாழ்க்கையில்லை, நாம் இறந்தபின் வரலாற்றில் நிற்கும்படி வாழ்வதே வாழ்க்கை' என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை! ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழ்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு நான் பரிந்துரை செய்வது: 'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!' :)
சொல்ல விரும்பும், ஓஷோ அவர்களின் கருத்து ஒன்று:
தட்டத்தேவையில்லை,
திறந்தே இருக்கிறது
கதவு!
Subscribe to:
Posts (Atom)