Wednesday, November 22, 2006

கல்லூரி கலாட்டாக்கள்

நாங்க B.Sc படிச்சப்போ எப்போ பாத்தாலும் கலை இலக்கியம்னு சுத்திகிட்டு இருந்தோம். ஆனா MCA வந்தப்புறம் ஒரே கலாட்டா, கூத்துதான். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கொஞ்சம் ஸ்டிரிக்ட். அதுலயும் physics, computer science டிப்பாட்மென்ட்னா கேக்கவே வேணாம். internel marks க்கு பயந்தே வாழ்கைய ஓட்டணும். ஆனா, எங்க கலை, இலக்கிய தாகத்துக்கு அங்க கிடைச்ச தீனி வேற எதப்பத்தியும்(படிப்பயும் சேத்துதான்!) எங்கள யோசிக்க விடல.

அதுக்கு நேர்மாறா, சென்னை crescent-ல கலை இலக்கியத்துக்கெல்லாம் வேலையே இல்லை. ஆனா, சினிமாவ மிஞ்சற கலாட்டாவெல்லாம் தினமும் பாக்கலாம் எங்க கிளாஸ்ல. சேந்த புதுசுல ஊர் பசங்கல்லாம் ஏதொ புது கிரகத்துல கொண்டுபோய் விட்ட மாதிரி முழிச்சோம். சிட்டி பசங்களோட துணிச்சலும், நுனிநாக்கு பீட்டரும் பாத்து மெரண்டுபோய்க் கெடந்தோம்.

போன வருஷம் BE முடிச்சிட்டு இந்தவருஷம் MCA ஃபஸ்ட் இயருக்கு க்ளாஸ் எடுக்க வந்த மேடம்கள் இவனுங்க கிட்ட பட்ட பாடு இருக்கே... முதல் செமஸ்டர் முடிவுலயே மூணு பேர் போர்க்கொடி தூக்கிட்டாங்க. இனிமே 96-99 batch க்கு கிளாஸ் எடுக்கவே மாட்டோம்ணு. அதேமாதிரி அவங்க அப்புறம் எங்களுக்கு கிளாஸ் எடுக்க வரவே இல்லை. ஆனாலும் எப்பயாச்சும் எக்ஸாம் சூப்பர்வைசரா வந்து மாட்டுவாங்க. ஒரு எக்ஸாம்ல அப்படி மாட்டின ஒரு மேடம் கிட்ட எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எழுந்து 'மேடம் பேப்பர்...' -ன்னான். அவங்க கைல வச்சிருந்த வெள்ளை பேப்பரை நீட்ட, 'அது எங்கிட்டயே இருக்கு மேடம். அதோ அவனோட ஆன்ஸர் ஷீட்லதான் ஃபுல்லா எழுதியிருக்கு... அது தான் வெணும்.' -ன்னான். தலைல அடிச்சிகிட்டே திட்டிகிட்டு போய்ட்டாங்க அவங்க. AVC காலேஜ்ல நெனச்சிகூட பாக்க முடியாத இந்தக் காட்சியை கண்முன்னே பார்த்து அசந்துபோய்ட்டேன். இதுக்குள்ள ஊர் பசங்களும் சிட்டி பசங்களுக்கு சளச்சவங்க இல்லன்னு நிரூபிச்சிட்டோம்(அதர் ஸ்டேட் பொண்ணுங்களோட பீட்டர் விட்டு கடலை போடுவதைத்தவிர!).

நாங்க எல்லாரும் பயப்படுற ஒருத்தர் யாருன்னா, எங்க HOD, முனைவர். பொன்னவைக்கோ அவர்கள் தான். செம ஸ்ரிக்ட். பசங்க முன்னாடியே வாத்தியாருங்கள வாங்கு வாங்குன்னு வாங்கிடுவார்னா பாத்துக்கோங்களேன். ஆனா ரொம்ப நல்ல மனுஷர். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்வாங்கல்ல... அப்படி. மிகுந்த தமிழ்ப்பற்றாளர். இப்போ தமிழ் இணையப் பல்கலைக்கத்தின் துணைவேந்தராக இருக்காரு.

அவரையே ஒருவாட்டி கலாய்ச்சிட்டான் எங்க க்ளாஸ் கணேஷ்! அது எங்களுக்கு கடைசி வருஷம். எக்ஸாமுக்கு அப்ளிகேஷன் போட்டுகிட்டு இருக்கோம். கணேஷ் காலேஜ் பக்கமே ரொம்ப நாள் வரல. போதிய வருகைப்பதிவு இல்லாததால அவன் எக்ஸாம் எழுதனும்னா form-ல HOD கையெழுத்து வாங்கணும். அன்னிக்குன்னு பாத்து ஒரு கேம்பஸ் இன்டர்வியூ. MCA பசங்க யாரும் செலக்ட் ஆகல. ஆனா BE பசங்க சிலர் செலக்ட் ஆகிட்டாங்க. அவர் எங்க மேல செம கடுப்புல இருந்தது தெரியாம இவன் அவர் ரூமுக்கு போயிருக்கான் - சிங்கத்த அதோட குகைலயே சந்திக்கிற மாதிரி!

'என்ன...?' ன்னு அவர் கர்ஜிக்க, இவன் ஏதோ சொல்ல வர்ரதுக்குள்ள இவன் final year MCA ன்னு ஞாபகம் வந்திருச்சி அவருக்கு.

'நீ MCA final year தான..?' ன்னு திரும்பவும் ஒரு கர்ஜனை!

எதுக்குடா இப்படி விழுந்து புடுங்கறார்ன்னு யோசிச்சிக்கிட்டே தயங்கித்தயங்கி, 'ஆமா சார்...' ன்னு இவன் சொல்ல,

'எதுக்குடா நீங்கல்லாம் காலேஜ் வரீங்க..?' ன்னு கத்தியிருக்கார்.

இவன் கொஞ்சம் கூட யோசிக்காம, 'ஹிஹி... வர்ல சார். அதான் அப்ளிகேஷன்ல உங்க sign வாங்க வந்திருக்கேன்..!' ன்னு சொல்ல, அவரே சிரிச்சிட்டார்.

ன்னிக்கு இந்த சம்பவமே ஒரு ஃபிளாஷ் பேக் ஆகிட்டாலும், இது நடந்தப்போ கணேஷூக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருந்துது. அவனோட ஸ்கூல் லைஃப் அது!

ஒரு நாள் க்ளாஸ்ல மிஸ் ரெக்காட் நோட்டெலாம் திருத்திகிட்டு இருந்திருக்காங்க. கணேஷோட நோட்டைப் பாத்ததும் அரண்டு போயி,

'டேய் கணேஷ்.. இங்க வா...'-னு கூப்பிட

நம்ம சார் 'எஸ் மிஸ்...' ஆஜர் ஆகிறார்.

'என்னடா இது...?' ரோட்ல காக்கா குதறின எலி மாதிரி இருந்த படத்த காமிச்சு அவங்க கேக்க,

'digestion system of rat மிஸ்!' -னு கூலா இவர் பதில்!

அவங்க டென்ஷன் ஆகி, 'பாத்தா அப்படியா இருக்கு...?' ன்னு முறைக்க,

'அதனாலதான் மிஸ் கீழ எழுதியிருக்கேன்..!' -ன்னு சொல்லியிருக்கார் நம்ம கணேஷ் :)

13 comments:

சேதுக்கரசி said...

மலரும் நினைவுகள் போல... ம்ம்ம் :)

Anonymous said...

//அவங்க டென்ஷன் ஆகி, 'பாத்தா அப்படியா இருக்கு...?' ன்னு முறைக்க,

'அதனாலதான் மிஸ் கீழ எழுதியிருக்கேன்..!' -ன்னு சொல்லியிருக்கார் நம்ம கணேஷ் :)
//

ROFL

Anonymous said...

Interesting Blog..

I am Ganesh's friend from Oracle ..

Anonymous said...

:)))))))))))) செம சிரிப்பு அருள்...

//computere science //
அட, எங்களை எல்லாம் விட ஒரு ஈ அதிகமா படிச்சிருக்கீங்களே!

அருள் குமார் said...

//மலரும் நினைவுகள் போல... ம்ம்ம் :) //

ஆமாங்க :)

நன்றி மதி!

//I am Ganesh's friend from Oracle .. //

நீங்களும் உங்களால முடிஞ்ச அளவு oracle ல கணேஷ் புகழ் பரப்புங்க :)

//அட, எங்களை எல்லாம் விட ஒரு ஈ அதிகமா படிச்சிருக்கீங்களே!//

ஏத்தா... மாத்துன்னா மாத்தீட்டு போறம். இதுக்கு இப்படி கலாய்க்கணுமா?!

பாகச வுல ஒரு முடிவு எடுக்கணும். மெம்பர்கள் எல்லாம் பாலாவைத் தவிர வேற யாரையும் கலாய்க்கக் கூடாதுன்னு :(

- யெஸ்.பாலபாரதி said...

//பாகச வுல ஒரு முடிவு எடுக்கணும். மெம்பர்கள் எல்லாம் பாலாவைத் தவிர வேற யாரையும் கலாய்க்கக் கூடாதுன்னு :( //

இதுல இது வேறயா? அடப்போங்கப்பா.. :((((((

துளசி கோபால் said...

'டீச்சருங்களைக் கலாய்க்க மாட்டேன்' னு 100 தடவை இம்பொசிஷன்
எழுதச் சொல்லலையா?

இல்லேன்னா இப்ப எழுதலாமே:-))))

Anonymous said...

அருள்,சில நிமிடங்களில்......10 வருடதிற்கு முன் நடந்த பசுமையான நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி.

(நானும் அந்த கலாட்டா கூட்டத்தில் ஒருவன் என்பதில் பெறுமிதம் கொள்கிரேன்)

-ஷஃபி

சேதுக்கரசி said...

கல்லூரிக் கால மலரும் நினைவுகளோட தப்பிச்சிரலாம்னு பாத்தீங்களா? காதல்/கத்திரிக்காய்/கல்யாண மலரும் நினைவுகளையும் இந்த நட்சத்திர வாரத்துல ஒரு பதிவு போட்டா எவ்ளோ நல்லாருக்கும் :) (நாங்களும் ரசிச்சுப் படிப்போம், பின்னூட்டமும் நெறைய வரும்.. ஒரே கல்லுல....)

அருள் குமார் said...

//காதல்/கத்திரிக்காய்/கல்யாண மலரும் நினைவுகளையும் இந்த நட்சத்திர வாரத்துல ஒரு பதிவு போட்டா எவ்ளோ நல்லாருக்கும் :) //
சேதுக்கரசி, நீங்க சீரியஸா சொல்றீங்களா இல்ல கலாய்க்கறீங்களான்னே புரியல. என்னமோ போங்க :)

சேதுக்கரசி said...

அச்சச்சோ எனக்கு கலாய்க்கவெல்லாம் தெரியாது.. "கலாய்க்கிறது எப்படி"னு யாராவது ஒரு பதிவு போட்டாப் புண்ணியமாப் போகும்!

நெசமாத்தாங்க சொல்றேன்!

அருள் குமார் said...

//கலாய்க்கிறது எப்படி"னு யாராவது ஒரு பதிவு போட்டாப் புண்ணியமாப் போகும்!//

ஆஹா... நீங்கதானா அது!

சேதுக்கரசி said...

//ஆஹா... நீங்கதானா அது!//

இல்லவே இல்ல! "பதிவு போடாமல் இருப்பது எப்படி"னு வேணா என் பதிவைப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்!